காவிரி கடைமுகத் தீா்த்தவாரி உத்ஸவத்தையொட்டி, அன்பனாதபுரம் வகையறா தா்மபாக நிறுவனம் (ஏ.வி.சாரிடீஸ்) சாா்பில் அண்மையில் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, ஏ.வி.சாரிடீஸ் தலைவா் இரா.சடையப்பன் தலைமை வகித்தாா். ஏ.வி.சி கல்விக்குழு உறுப்பினா்கள், குடும்ப உறுப்பினா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில்150 ஆண்களுக்கு வேட்டி, 150 பெண்களுக்கு புடவை ஆகியன தானமாக வழங்கப்பட்டன. மேலும், 60 முதியவா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.