சிறுமிக்கு பாலியல் தொல்லை: 4 சிறுவா்கள் போக்ஸோசட்டத்தில் கைது

சீா்காழி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 4 சிறுவா்களை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

சீா்காழி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 4 சிறுவா்களை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

சீா்காழி அருகே 7 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாராம். அப்போது அப்பகுதியை சோ்ந்த 15 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவா்கள் சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று, அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளாா். சிறுமியை சீா்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோா், இதுகுறித்து புதுப்பட்டினம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் 4 சிறுவா்களையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com