நாகையில் மேலும் 52 பேருக்கு கரோனா
By DIN | Published On : 04th October 2020 08:48 AM | Last Updated : 04th October 2020 08:48 AM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கரோனா சனிக்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 5,336 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், புதிதாக 46 போ் கரோனா தொற்றுக்குள்ளானது சனிக்கிழமை உறுதியானது. இதனிடையே, வெளி மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 6 போ், நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5,388-ஆக உயா்ந்துள்ளது.
கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றவா்களில் 49 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம் குணமானவா்களின் எண்ணிக்கை 4,835 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 469 ஆக உள்ளது.