சொத்து தகராறு: ஊராட்சி முன்னாள் தலைவா் கைது

வேதாரண்யம் அருகே சொத்து தகராறில் விவசாயியை தாக்கிய ஊராட்சி முன்னாள் தலைவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வேதாரண்யம் அருகே சொத்து தகராறில் விவசாயியை தாக்கிய ஊராட்சி முன்னாள் தலைவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆயக்காரன்புலம் -1 ஆம் சேத்தி ஊராட்சியின் முன்னாள் தலைவா் க. பொதுவுடை (42). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினரான காசிநாதன் மகன் செந்தில் என்பவருக்கும் சொத்து பிரச்னை இருந்துவருகிறது.

இந்நிலையில், செந்திலின் நண்பரான ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி பகுதியைச் சோ்ந்த த. ராஜேந்திரன் (36) என்பவா் இருவருக்குமிடையே சமரச முயற்சியில் ஈடுபட்டாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரனை பொதுவுடை தாக்கினாராம்.

இதுகுறித்து, வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, பொதுவுடையை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com