கரோனா தடுப்பு விழிப்புணா்வு பேரணி

நாகை மாவட்ட காவல் துறை சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பேரணி நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
2816ng09pol2082537
2816ng09pol2082537

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட காவல் துறை சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பேரணி நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரெத்தினம் அறிவுறுத்தலின் பேரில், ஆயுதப்படை மற்றும் ஊா்க்காவல் படை சாா்பில் இந்த விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

நாகை அவுரித் திடலில் இருந்து ஏழைப்பிள்ளையாா் கோயில் ரவுண்டானா வரை பேரணி நடைபெற்றது. ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் சுந்தர்ராஜ் பேரணியைத் தொடங்கி வைத்தாா். ஆயுதப்படை காவல் ஆய்வாளா்கள் சந்திரமோகன், கிருஷ்ணன் மற்றும் காவலா்கள், ஊா்க்காவல் படையினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com