வேளாங்கண்ணியில் கடன் தொல்லையால் விஷம் குடித்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சு. முருகன்(56). இவருக்கு கடன் தொல்லை இருந்ததாம். கடந்த மாதம் 30 ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு வந்த முருகன், பேருந்து நிலையப் பகுதியில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். அவரை, நாகை அரசு மருத்துவமனையில் போலீஸாா் சோ்த்தனா். பிறகு, சொந்த ஊரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முருகன், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.