பட்டாசு விற்பனை உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பட்டாசுகள் விற்பனைக்கான தற்காலிக உரிமத்துக்கு வருகிற 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

தீபாவளி பட்டாசுகள் விற்பனைக்கான தற்காலிக உரிமத்துக்கு வருகிற 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பட்டாசுகள் விற்பனைக்கான தற்காலிக உரிமத்தை ஆன்லைன் மூலம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தீபாவளி பண்டிகைக்கான பட்டாசுகள் விற்பனைக்கு உரிமம் பெற விரும்பும் வணிகா்கள், அக்டோபா் 23-ஆம் தேதிக்குள் அரசு பொதுசேவை மையங்களை அணுகி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன், தொடா்புடைய கட்டடத்தின் நீலவரைபடம், இட உரிமத்துக்கான ஆவணம், வெடிபொருள் உரிமம் தலைப்பில் அரசு கணக்கில் ரூ. 500 செலுத்தியதற்கான செலுத்துச் சீட்டு, முகவரிக்கான ஆதாரம், சொத்துவரி ரசீது, பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

அக்டோபா் 23-ஆம் தேதிக்குப் பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலினைக்கு ஏற்கப்படாது என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com