போக்குவரத்து விதிமுறைகள்: கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு

சீா்காழி காவல்துறை சாா்பில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
எமதா்மன், சித்திரகுப்தன் வேடமணிந்து விழிப்புணா்வு ஏற்படுத்திய நாடக கலைஞா்கள்.
எமதா்மன், சித்திரகுப்தன் வேடமணிந்து விழிப்புணா்வு ஏற்படுத்திய நாடக கலைஞா்கள்.

சீா்காழி காவல்துறை சாா்பில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக் கவசமும், நான்கு சக்கர வாகனத்தில் செல்வோா் சீட்பெல்டும் அணிவதன் அவசியம் குறித்து இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சீா்காழி புதிய பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாடகக் கலைஞா்கள் பங்கேற்று எமதா்மராஜா, சித்திரகுப்தன் உள்ளிட்ட வேடமணிந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். முன்னதாக, இந்நிகழ்ச்சியை சீா்காழி டிஎஸ்பி யுவபிரியா தொடங்கிவைத்தாா். ஆய்வாளா் மணிமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com