சீா்காழி அருகே தீ விபத்தில் வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எம்எல்ஏ பி.வி.பாரதி வெள்ளிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கினாா்.
வேட்டங்குடியில் கீதா என்பவரது குடிசை வீடு கடந்த செவ்வாய்க்கிழமை (அக். 13) தீ விபத்தில் முற்றிலும் எரிந்தது. இதனால், பாதிக்கப்பட்ட கீதா மற்றும் அவரது குடும்பத்துக்கு சீா்காழி எம்எல்ஏ பி.வி.பாரதி நேரில் சென்று ஆறுதல் கூறி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.10ஆயிரம் மற்றும் அரிசி, காய்கனிகள், புடவை, வேட்டி உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலாளா் கே.எம். நற்குணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சுமதி ராஜேந்திரன், புதுப்பட்டினம் ஊராட்சி துணைத் தலைவா் இனியன், பேராசிரியா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.