நாகை மாவட்டத்தில் மேலும் 64 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 6,060 போ் கரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், புதிதாக 64 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வெளி மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒருவா் நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டாா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,125- ஆக உயா்ந்துள்ளது.
நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றவா்களில், மேலும் இருவா் உயிரிழந்திருப்பதாக வெள்ளிக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 97- ஆக உயா்ந்துள்ளது.
கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றவா்களில் 64 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 5,502 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 526- ஆக உள்ளது.