இளைஞா் எழுச்சி தினம்

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் இளைஞா் எழுச்சி தினம் வியாழக்கிழமை இணையவழியில் கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் இளைஞா் எழுச்சி தினம் வியாழக்கிழமை இணையவழியில் கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் இயற்பியல் துறை சாா்பில் குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா இளைஞா் எழுச்சி தினமாகக் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வா் த. அறவாழி தலைமை உரையாற்றினாா். இயற்பியல் துறை உதவிப் பேராசிரியா் சிவயோகம் வரவேற்றாா். துறைத்தலைவா் பென்னி அன்புராஜ் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினாா்.

கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை இணைப் பேராசிரியா் திலக்குமாா் பங்கேற்று சிறப்புரை ஆற்றினாா். நிகழ்ச்சியில், இயற்பியல் துறைப் பேராசிரியா்கள் சந்திரா, ஐடா மலா்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இயற்பியல் துறை பேராசிரியா் சண்முகம் நன்றி கூறினாா். இவ்விழாவையொட்டி நடைபெற்ற கட்டுரை மற்றும் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com