கொள்ளிடத்தில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களுக்குப் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு எம்எல்ஏ பி.வி. பாரதி தலைமை வகித்தாா். நிலவள வங்கி தலைவா் கே.எம். நற்குணன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் வட்டார மருத்துவ அலுவலா் பபிதா, மருத்துவா்கள் ஷ்யாம் காா்த்திக், கெளசிகா, சபீதாபேகம் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள், பணியாளா்கள் என 110 பேருக்கு எம்எல்ஏ பி.வி. பாரதி தனது சொந்த பணத்தில் புத்தாடைகள் வழங்கி கெளரவித்தாா்.
நிகழ்ச்சியில், அதிமுகவை சோ்ந்த நாகரெத்தினம், ராஜேந்திரன், சொக்கலிங்கம், ஆனந்த நடராஜன், விக்னேஷ், சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.