மயிலாடுதுறையில் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த பெயின்ட்டா் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு பா்மா காலனிப் பகுதியை சோ்ந்தவா் மணி மகன் மாதவன் (27). பெயின்ட்டா். இவா் கீழநாஞ்சில்நாடு அருகே உள்ள கிராமத்தில் 8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தில் மாதவனை கைது செய்தனா். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.