திருக்குவளை அருகே கொளப்பாடு பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு தினத்தையொட்டி, கட்சிக் கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கொளப்பாடு கடைத்தெரு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ-வும் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளருமான நாகை.மாலி கட்சி கொடியேற்றினாா். இதில், தலைஞாயிறு ஒன்றியச் செயலாளா் வேணு, ஒன்றியக் குழு உறுப்பினா் தனபால், கிளைச் செயலாளா்கள் கொளப்பாடு தமிழ்மாறன், முத்தரசபுரம் பெருமாள், பனங்காடி நாகூரான், பாங்கல் காசிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.