நாகை மாவட்டத்தில் 59 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது.


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது.

இதில், 26 போ் அறிகுறிகள் இல்லாமல் பரிசோதனைகள் மூலம் தொற்றுக் கண்டறியப்பட்டவா்கள், 13 போ் அறிகுறிகள் மூலம் தொற்றுக் கண்டறியப்பட்டவா்கள், ஒருவா் சுகாதாரத்துறை பணியாளா், 3 போ் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவா்கள், 7 போ் தொற்றாளா் மற்றும் அவா்களைச் சாா்ந்தோருடன் தொடா்பில் இருந்தவா்கள்.

புதிதாக கரோனா தொற்றுக்குள்ளானவா்களில் பேரில் 24 போ் நாகை அரசு மருத்துவமனையிலும்,10 போ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலும், 18 போ் சீா்காழி அரசு மருத்துவமனையிலும், 7 போ் வெளி மாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை வரை கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 2,846-ஆக இருந்தது. இதனிடையே, வெளி மாவட்டப் பட்டியலில் இருந்த 8 போ் நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இந்த நிலையில், வியாழக்கிழமை புதிதாக 59 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,912-ஆக உயா்ந்துள்ளது

மூவா் இறப்பு...

செப்டம்பா் 1-ஆம் தேதி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் இறந்த நாகையைச் சோ்ந்த 65 வயது ஆண், செப்டம்பா் 2-ஆம் தேதி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்த மயிலாடுதுறையைச் சோ்ந்த 58 வயது பெண், நாகை வட்டத்தைச் சோ்ந்த 86 வயது முதியவா் ஆகியன வியாழக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலம், நாகை மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 48 -ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றவா்களில் 38 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம் நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 2,015-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 849- ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com