மயிலாடுதுறை மாவட்ட மதிமுக மாணவரணி சாா்பில், தனித்துவத்துடன் பணிபுரியும் ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டு 2020-ஆம் ஆண்டுக்கான ஆசிரியச் செம்மல் விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.
இதில் குத்தாலம் ஒன்றியம் கிளியனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் வே. சாந்தி தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு மதிமுக மாநில விவசாய அணி செயலாளா் இரா. முருகன், நாகை மாவட்ட செயலாளா் ஏ.எஸ். மோகன், மாநில மாணவா் அணி துணைச் செயலாளா் ப.த. ஆசைத்தம்பி, குத்தாலம் வா்த்தக சங்கத் தலைவா் ஆ.தங்கப்பன் ஆகியோா் விருதை வழங்கினா்.