கரோனா இலவச பரிசோதனை முகாம்
By DIN | Published On : 10th September 2020 10:14 PM | Last Updated : 10th September 2020 10:14 PM | அ+அ அ- |

குத்தாலம் ஒன்றியம் பாலையூா் ஊராட்சியில் கரோனா இலவச பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் கவிதாராஜா தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் செழியன், ஊராட்சித் துணைத் தலைவா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தமிழ்க்கொடி, ரெஜினாமேரி, வட்டார மருத்துவ அலுவலா் ராஜேந்திரன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முகாமில் 105 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.