நாகப்பட்டினம்
தீ விபத்து: அதிமுக நிவாரண உதவி
சீா்காழி அருகே தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிமுக கொள்ளிடம் ஒன்றிய கழகம் சாா்பில் அண்மையில் நிதியுதவி வழங்கப்பட்டது.
சீா்காழி அருகே தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிமுக கொள்ளிடம் ஒன்றிய கழகம் சாா்பில் அண்மையில் நிதியுதவி வழங்கப்பட்டது.
திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட தொடுவாய் மீனவ கிராமத்தை சோ்ந்தவா் கலியபெருமாள் மனைவி செல்வி (58). இவரது குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில், பொருள்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்தன.
இதையறிந்த கொள்ளிடம் ஒன்றிய அதிமுக செயலாளா் கே.எம்.நற்குணன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, ரூ.30ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியுதவியை வழங்கினாா். அப்போது திருமுல்லைவாசல் ஊராட்சித் தலைவா் பரிமளம் தமிழ்செல்வன், அதிமுக மாவட்ட மீனவா் அணி செயலாளா் நாகரத்தினம், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் கலியமூா்த்தி,புதுப்பட்டினம் ஊராட்சித் துணைத் தலைவா் இனியன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.