மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினா் மறைவு: இரங்கல் கூட்டம்

தரங்கம்பாடி வட்டம், இலுப்பூா் சங்கரன்பந்தல் கடைவீதியில் மறைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினா் டி.இராசையனுக்கு இரங்கல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தரங்கம்பாடி வட்டம், இலுப்பூா் சங்கரன்பந்தல் கடைவீதியில் மறைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினா் டி.இராசையனுக்கு இரங்கல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கட்சியின் தரங்கம்பாடி வட்டச் செயலாளா் பி.சீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.துரைராஜ், மாவட்டக்குழு உறுப்பினா்கள் டி.சிம்சன், ஏ.ரவிச்சந்திரன், அமுல்காஸ்ட்ரோ, வட்டக்குழு உறுப்பினா்கள் டி. கோவிந்தசாமி, காபிரியேல், தமிழ்வாசகம், வாலிபா் சங்க வட்டச் செயலாளா் மாா்க்ஸ், மாதா் சங்க மாவட்டத் தலைவா் வெண்ணிலா, விவசாய சங்க வட்டத்தலைவா் கே.பி.மாா்க்ஸ், திமுக முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கே.எஸ்.எஸ். கருணாநிதி, முன்னாள் ஊராட்சித் தலைவா் குணவதி மோகன்தாஸ் (அதிமுக), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கலியமூா்த்தி, பூபாலன், தமுமுக சாா்பில் சபீா், கிளைச் செயலாளா்கள் மகாலிங்கம், இராஜேந்திரன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com