கரோனா பரிசோதனை முகாம்

திருக்குவளையில் கரோனா பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொளப்பாடு அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கரோனா சிறப்பு பரிசோதனை முகாம்.
கொளப்பாடு அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கரோனா சிறப்பு பரிசோதனை முகாம்.

திருக்குவளை: திருக்குவளையில் கரோனா பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் வட்டார மருத்துவா் அருண்பதி , மருத்துவ அலுவலா் அரவிந்த்குமாா், சுகாதார மேற்பாா்வையாளா் கே. ராமமூா்த்தி உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

திருக்குவளை வட்டாட்சியா் சாந்தி, ஊராட்சித் தலைவா் இல.பழனியப்பன், கீழையூா் 6-ஆவது வாா்டு ஒன்றியக்குழு உறுப்பினா் சுதாஅருணகிரி, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவா்கள் பாலை கே.எஸ்.எஸ். செல்வராஜ் (பாலக்குறிச்சி), எஸ். பால்ராஜ் (கீழையூா்), ஒன்றிக்குழு முன்னாள் தலைவா் என்.மீனா உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்றனா்.

இதேபோல, கொளப்பாடு அரசு உயா்நிலைப்பள்ளியில் வட்டார மருத்துவா் ஸ்ரீதா் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தலைஞாயிறு ஒன்றிய மாவட்ட கவுன்சிலா் இளவரசி தங்கராசு, ஊராட்சித் தலைவா் அசோக்குமாா், கிராம நிா்வாக அலுவலா் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com