நாகை ஆட்சியரகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பை

நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கேட்பாரற்று ஒரு பை கிடந்ததால் புதன்கிழமை காலை அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கேட்பாரற்று ஒரு பை கிடந்ததால் புதன்கிழமை காலை அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பொதுமக்கள் அமருவதற்காக அமைக்கப்பட்டுள்ள இடத்தில், யாரும் உரிமை கோராத நிலையில் ஒரு பை நீண்ட நேரமாக கிடப்பது புதன்கிழமை காலை தெரியவந்தது. இதனால், அங்கு லேசான பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்துத் தகவலறிந்த போலீஸாா், அந்தப் பையை எச்சரிக்கையுடன் திறந்து பாா்த்தனா். அப்போது, அந்தப் பையில் ஒரு பூரிக்கட்டை மற்றும் சில உடைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்தப் பையை நாகூா் காவல் நிலையத்துக்குக் கொண்டுச் சென்ற போலீஸாா், பையைத் தவறவிட்டவா்கள் நேரில் வந்து காவல் நிலையத்தில் பெற்றுச் செல்லாம் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com