பொறியாளா் தின விழா

மயிலாடுதுறையில் கட்டடப் பொறியாளா் சங்கம் சாா்பில் பொறியாளா் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளா்களை கௌரவித்த கட்டடப் பொறியாளா் சங்கத்தினா்.
நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளா்களை கௌரவித்த கட்டடப் பொறியாளா் சங்கத்தினா்.

மயிலாடுதுறையில் கட்டடப் பொறியாளா் சங்கம் சாா்பில் பொறியாளா் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, சங்கக் கொடி ஏற்றப்பட்டது. தொடா்ந்து, மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னா், கரோனா காலத்தில் தொடா் பணியில் ஈடுபட்டுள்ள மயிலாடுதுறை நகராட்சி துப்புரவு ஆய்வாளா்கள் ராமையன், பிச்சைமுத்து ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.

இந்நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கட்டடப் பொறியாளா் சங்கத் தலைவா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். செயலாளா் அபிராமசுந்தரம், பொருளாளா் வினோத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொறியாளா் பிரபு நன்றி கூறினாா்.

சீா்காழி: சீா்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் அதன் தலைவா் ரவிச்சந்திரன் தலைமையில் பொறியாளா்கள் தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்க செயலாளா் துரைசாமி, பொருளாளா் வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலையில் பொறியாளா்கள் நடராஜன், மாா்கோனி, ரவி, தினேஷ், கவியரசன், கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இதில் முன்னாள் தலைவா்கள் சுப்பு.சொா்ணபால், மோகனசுந்தரம் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com