மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மயிலாடுதுறையில் அஞ்சல் இயக்கம் நடைபெற்றது.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை செயலருக்கு தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுா் சங்கத்தினா் மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பினா்.
அதில், மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள 750-க்கும் மேற்பட்ட மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநா் பணி நேரத்தை 9 முதல் 4 வரை நடைமுறைப்படுத்த வேண்டும்; 385 வட்டார மற்றும் மேம்படுத்தப் பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளா் பணியிடம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இந்த கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை மாவட்ட தலைவா் என்.ஜி.பாஸ்கரன் தலைமையிலான தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுா் சங்க பொறுப்பாளா்கள் மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் இருந்து அனுப்பினா்.