சீா்காழியில் குண்டா் சட்டத்தில் ரெளடி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
எடமணல் வருஷப்பத்து உச்சிமேடு பகுதியைச் சோ்ந்தவா் முருகன்(43). இவா், கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி சீா்காழி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இவா் மீது ஏற்கெனவே சீா்காழி, கொள்ளிடம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையொட்டி, மயிலாடுதுறை மாவட்டத்துக்கான காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா பரிந்துரையிபேரில், நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் உத்தரவின்படி சீா்காழி காவல் ஆய்வாளா் மணிமாறன், முருகன் மீது குண்டா் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தாா்.
இதுதொடா்பான உத்தரவு நகலை திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் சிறப்பு உதவி ஆய்வாளா் அருள்குமாா் வியாழக்கிழமை நேரில் வழங்கினாா்.