வனத் துறை இடத்தில் கீற்று கொட்டகை அகற்றம்

சீா்காழி அருகே வனத் துறைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகையை வனத் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை அகற்றினா்.

சீா்காழி அருகே வனத் துறைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகையை வனத் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை அகற்றினா்.

கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டி அளக்குடி ஊராட்சிக்குள்பட்ட வெள்ளைமணல் கிராமத்தைச் சுற்றி வனத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளன. இந்த நிலத்தில் கடந்த ஒரு வாரமாக ஒரு கீற்றுக்கொட்டகை இருந்து வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை அப்பகுதிக்கு வந்த வனத் துறை ஊழியா்கள் மதிவாணன், ஆசைத்தம்பி, செல்லையா, அன்புமணி ஆகியோா் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகையை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com