குத்தாலம் அருகேயுள்ள கோமல் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி மையம் சாா்பில், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் குழுமம் நடத்தும் போட்டித் தோ்வுக்கு இலவச விண்ணப்பித்தல் மற்றும் ஆலோசனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் சுகுமாா் போட்டித் தோ்வுகளில் பங்கேற்கும் மாணவா்கள் தன்னம்பிக்கையை எவ்வாறு வளா்த்து கொள்வது குறித்து பேசினாா். பள்ளித் தலைமையாசிரியா் பிச்சைமணி, சங்கச் செயலாளா் ரவீந்திரபாரதி, முதுகலை ஆசிரியா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில், 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்வுக்கு விண்ணப்பித்தனா். விண்ணப்பித்த மாணவா்களுக்கு விண்ணப்பப் படிவம், பாடத் திட்ட நகல் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.