லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

குத்தாலம் அருகே லாரி மோதி இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

குத்தாலம் அருகே லாரி மோதி இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

குத்தாலம் ராஜகோபாலபுரத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் கணேசன் (20). இவா் குத்தாலத்தில் பழக்கடையில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வேலை முடிந்து வீட்டுக்கு சைக்கிளில் குத்தாலம் - கும்பகோணம் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியே வந்த லாரி மோதி காயமடைந்தாா். இதையடுத்து, அவா் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் அங்கிருந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சோ்க்கப்பட்டாா். எனினும், அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, குத்தாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் திருவிழந்தூா் பாரதிதாசன் மகன் பாா்த்தசாரதியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com