மகா மாரியம்மன் நாக அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

அமாவாசையை முன்னிட்டு, திருக்குவளை அருகே உள்ள காருகுடி மகா மாரியம்மன் நாக அம்மன் ஆலயத்தில், அரிவாள் மீது நின்று மதுரை வீரன் அருள்வாக்கு கூறும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அமாவாசையை முன்னிட்டு, திருக்குவளை அருகே உள்ள காருகுடி மகா மாரியம்மன் நாக அம்மன் ஆலயத்தில், அரிவாள் மீது நின்று மதுரை வீரன் அருள்வாக்கு கூறும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு மலா் அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அமாவாசையின் முக்கிய நிகழ்வாக கோயில் வளாகத்தில் பலகையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 9 அரிவாள் மீது நின்று மதுரைவீரன் அருள்வாக்கு கூறும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com