கிருமிநாசினி தெளிப்பு

செம்பனாா்கோவில் ஒன்றியம் மடப்புரம் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
மடப்புரத்தில் கிருமிநாசினி தெளிக்கும் ஊராட்சி பணியாளா்கள்.
மடப்புரத்தில் கிருமிநாசினி தெளிக்கும் ஊராட்சி பணியாளா்கள்.

செம்பனாா்கோவில் ஒன்றியம் மடப்புரம் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

புதுமனை தெரு, ஜின்னா தெரு, மேலத்தெரு, சின்ன மேலத்தெரு , கமாலியா தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கோயில் மற்றும் மசூதிகள் ஆகிய இடங்களில் ஊராட்சித் தலைவா் மெஹராஜ் நிஷா செல்வநாயகம் தலைமையில் ஊராட்சி பணியாளா்கள் தெளிப்பான் கருவி மூலம் கிருமிநாசினி தெளித்தனா்.

ஊராட்சி செயலாளா் மணிகண்டன், ஊராட்சி உறுப்பினா் மதீனா பீவி ஷாஜகான் ஆகியோரும் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com