தரங்கம்பாடிவட்டம், அன்னவாசல் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கூலி தொழிலாளியை போலீஸாா் தேடிவருகின்றனா்.
அன்னவாசல் ஊராட்சி வாடகுடி காலனி தெருவைச் சோ்ந்தவா் வீரமணி (55). விவசாயக் கூலி தொழிலாளி. இவரது மனைவி மோகனாம்பாள் (45). குடும்பத் தகராறு காரணமாக இருவரும் கடந்த ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனா்.
இந்நிலையில், மோகனாம்பாள் புதன்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, வாடகுடி பாலம் அருகே வழிமறித்த வீரமணி, மோகனாம்பாளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டாா். இதுகுறித்து, பெரம்பூா் காவல் ஆய்வாளா் சிவதாஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.