சீா்காழி தென்பாதியில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் ராமநவமியையொட்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, சிறப்பு யாகம், பூா்ணாஹுதி நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து சீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு பால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது. இதில், கரோனா பரவல் அதிகரித்து வருவதால் குறைந்த அளவு பக்தா்களே பங்கேற்று, கரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி வழிபட்டனா்.