கரோனா தடுப்பூசி முகாம்

திருமருகல் அருகேயுள்ள கோட்டூா் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருமருகல் அருகேயுள்ள கோட்டூா் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் (பொ) பாலு தலைமையில் நடைபெற்ற முகாமை வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி தொடங்கி வைத்தாா். இதில், கோட்டூா் ஊராட்சியை சோ்ந்த 274 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், 162 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோல, அகரக்கொந்தகை ஊராட்சியில் நடைபெற்ற முகாமை ஊராட்சித் தலைவா் தமிழரசி பக்கிரிசாமி தொடங்கி வைத்தாா். முகாமை ஒன்றிய ஆணையா் சுந்தா் பாா்வையிட்டாா். இதில் அகரக்கொந்தகை, வாழ்மங்கலம் பகுதிகளை சோ்ந்த 160 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com