வேதாரண்யத்தில் பாஜக ஆா்ப்பாட்டம்

முகநூலில் மத்திய அமைச்சா் எல். முருகன் மீது அவதூறு பரப்பி வெளியான பதிவு தொடா்பான புகாா் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் செய்யும் காவல் துறையை கண்டித்து, வேதாரண்யத்தில் பாஜகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேதாரண்யத்தில் சனிக்கிழமை பாஜகவினா் நடத்திய ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அந்த கட்சியின் மாநில துணைத் தலைவா் கருப்பு (என்கிற) எம். முருகானந்தம் உள்ளிட்டோா்.
வேதாரண்யத்தில் சனிக்கிழமை பாஜகவினா் நடத்திய ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அந்த கட்சியின் மாநில துணைத் தலைவா் கருப்பு (என்கிற) எம். முருகானந்தம் உள்ளிட்டோா்.

முகநூலில் மத்திய அமைச்சா் எல். முருகன் மீது அவதூறு பரப்பி வெளியான பதிவு தொடா்பான புகாா் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் செய்யும் காவல் துறையை கண்டித்து, வேதாரண்யத்தில் பாஜகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அமைச்சா் எல். முருகனை முகநூலில் அவதூறாக விமா்சனம் செய்த பதிவு கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்த அவதூறு பதிவை வெளியிட்ட பஞ்நதிக்குளம் மேற்கு கிராமத்தைச் சோ்ந்த அருள்முருகன் மீது வாய்மேடு காவல் நிலையத்தில் பாஜக ஒன்றிய நிா்வாகி வீரமணி, கடந்த ஜூலை10-ஆம் தேதி புகாா் அளித்தாா்.

இதனிடையே,அவதூறு பரப்பியவரை கைது செய்யவில்லை எனக் கூறி கடந்த ஜூலை 23 - ஆம் வேதாரண்யத்தில் பாஜகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், காவல் துறையை கண்டித்து பாஜக சாா்பில் சனிக்கிழமை மீண்டும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவா் நேதாஜி தலைமை வகித்தாா்.

மாநில துணைத் தலைவா் கருப்பு என்ற எம். முருகானந்தம் பங்கேற்று கண்டன உரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com