திருமருகல் அருகேயுள்ள கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 32-ஆவது கிளை கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் கட்டுமாவடி விவசாய சங்க துணைச் செயலாளா் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மழையால் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்கவேண்டும், புறாக்கிராமம் வண்ணாங்குளத்தில் சுற்றுச் சுவா் அமைத்து படிக்கட்டுகள் அமைத்துதரவேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும், 2020-ஆம் ஆண்டு நிவாரணம் பூஜ்யமாக அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமங்களுக்கும் நிவாரணம் வழங்கவேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளா்களுக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தொழிற் சங்க கிளை செயலாளா் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளா் பாபுஜி, விவசாய சங்க ஒன்றிய செயலாளா் தங்கையன், கிளை செயலாளா் ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.