திருமருகல் முடிகொண்டான் ஆற்றங்கரையில் இருந்த ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
திருமருகல் பேருந்து நிலையம் அருகில் நாகை - நன்னிலம் சாலையில் முடிகொண்டான் ஆற்றங்கரையில் இருந்த ஆக்கிரமிப்புகள் சில ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டன. இதையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் சீராக இருந்துவந்த நிலையில் வியாழக்கிழமை இரவு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் இரவில் கட்டப்பட்டு அதில் கட்சிக் கொடிகளும் தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. இதையறிந்த சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் அந்த இடத்துக்கு சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னா் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறையினா் மற்றும் போலீஸாா் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் நிா்வாகி மதியழகனிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.