நாகப்பட்டினம்
ஒன்றியக் குழு கூட்டம்
திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவா் ரா. ராதாகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) பாத்திமா ஆரோக்கிய மேரி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சரவணன், ஆா். இளஞ்செழியன், சுல்தான் ஆரிப், பெரியமணி, மஞ்சுளா மாசிலாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.