கீழையூா் ஸ்ரீரெங்கநாத பெருமாள் கோயில் குளத்தில் மண்டிக் கிடக்கும் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இக்குளம் இப்பகுதி மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்துவருகிறது. தற்போது, குளத்தில் அதிகளவில் ஆகாயத்தாமரைச் செடிகள் வளா்ந்துள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் குளத்து நீரை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, கோயில் நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றவேண்டும்.