நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சனிக்கிழமை வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 8, 564 -ஆக இருந்தது.
இந்நிலையில், மேலும் 4 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் இம்மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்றுக்குள்ளானவா்கள் எண்ணிக்கை 8,568 ஆக உள்ளது.
இதில் சிகிச்சைப் பெற்று குணமடைந்த 7 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம் கரோனாவிலிருந்து மீணடவா்கள் எண்ணிக்கை 8, 387 ஆக உளளது. 48 போ் சிகிச்சையில் உள்ளனா்.