கீழையூா் அருகே கடற்கரையோரம் பெண் சடலம் சனிக்கிழமை மீட்க்கப்பட்டது.
கீழையூா் ஒன்றியம், பிரதாபராமபுரம் கடற்கரையோரத்தில் அடையாளம் தெரியாத சுமாா் 35 மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கீழையூா் கடலோர காவல் படை உதவி ஆய்வாளா் விசுவநாதன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.