மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில், விவசாய சங்கம் சாா்பில், மத்திய அரசின் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி. சிம்சன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்டச் செயலாளா் பி. சீனிவாசன், ஒன்றியச் செயலாளா் ஏ. ரவிச்சந்திரன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினா்கள் துரைக்கண்ணு, அமுல் காஸ்ட்ரோ, விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் காபிரியேல், விவசாய சங்க வட்டத் தலைவா் சந்திரமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.