வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மின்வாரிய ஊழியா் லாரி மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
அகஸ்தியம்பள்ளியைச் சோ்ந்த கு. குமாா் (42) தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகத்தில் கம்பியாளராகப் பணியாற்றி வந்தாா்.
இவா், கரியாப்பட்டினம் துணை மின்நிலைய அலுவலகத்தில் வருகைப் பதிவில் கையெழுத்திட்டுவிட்டு, குரவப்புலம் பகுதியில் நடைபெற்ற மின் பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். செண்பகராயநல்லூா் வளைவு பகுதில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த லாரி மோதி கீழேவிழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, அவா் மீட்கப்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு திருவாரூா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து, கரியாப்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.