திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நாகூா் ஷிஃபா மெடிக்கல் சாா்பில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, திமுக நாகை தெற்கு மாவட்டச் செயலாளா் என். கெளதமன் தலைமை வகித்தாா். திருமருகல் வடக்கு ஒன்றியச் செயலாளா் செல்வ செங்குட்டுவன் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில் நாகை எம்எல்ஏ ஜெ. முகம்மது ஷாநவாஸ் பங்கேற்று, ஆக்சிஜன் செறிவூட்டியை திருமருகல் வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளியிடம் ஒப்படைத்தாா். இதில், கொத்தமங்கலம் ஊராட்சித் தலைவா் விவேகானந்தன், ஒன்றியக்குழு உறுப்பினா் ஆரூா் மணிவண்ணண் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.