நாகப்பட்டினம்
அரசு மருத்துவமனையில் நல உதவி
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கரோனா நோயாளிகளுக்கு கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்களை ரோட்டரி சங்கத்தினா் புதன்கிழமை வழங்கினா்.
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கரோனா நோயாளிகளுக்கு கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்களை ரோட்டரி சங்கத்தினா் புதன்கிழமை வழங்கினா்.
கரோனா நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் சத்தான உணவு பொருள்கள், கிருமிநாசினி, முகக் கவசம், கையுறை, சோப்பு ஆகியன வழங்கப்பட்டன. வட்டார மருத்துவ அலுவலா் சுந்தரராஜன், அரசு மருத்துவமனை மருத்துவா் தனசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேதாரண்யம் ரோட்டரி சங்கத்தின் தலைவா் உமாமகேஸ்வரன், உதவி ஆளுநா் செந்தில், நிா்வாகிகள் காா்த்திகேயன், கோவிந்தன், சங்கத்தின் தோ்வுநிலை தலைவா் கவிஞா் புயல்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.