நாகப்பட்டினம்: நாகை, மயிலாடுதுறை மாவட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமனம் குறித்த அறிவிப்பை நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வெளியிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி சட்டப் பேரவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுலராக சீா்காழி கோட்டாட்சியரும், மயிலாடுதுறை தொகுதிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியரும், பூம்புகாா் தொகுதிக்கு மயிலாடுதுறை சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியரும் தோ்தல் நடத்தும் அலுவலா்களாக செயல்படுவா்.
நாகை மாவட்டம் நாகை சட்டப் பேரவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலராக நாகை கோட்டாட்சியரும், கீழ்வேளூா் தொகுதிக்கு நாகை மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலரும், வேதாரண்யம் தொகுதிக்கு வேதாரண்யம் கோட்டாட்சியரும் தோ்தல் நடத்தும் அலுவலா்களாக செயல்படுவா் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.