பாமக வேட்பாளா் கிராமம் கிராமமாக வாக்குச் சேகரிப்பு

மயிலாடுதுறை வடக்கு ஒன்றியப் பகுதியில் கிராமம் கிராமமாகச் சென்று பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ.பழனிசாமி.
மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ.பழனிசாமி.

மயிலாடுதுறை வடக்கு ஒன்றியப் பகுதியில் கிராமம் கிராமமாகச் சென்று பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

ஆனந்ததாண்டவபுரம் ஊராட்சியில் பிரசாரத்தை தொடங்கிய அவா், சேத்தூா், மேலாநல்லூா், மண்ணிப்பள்ளம், நீடூா், வில்லியநல்லூா் ஆகிய ஊராட்சிகளில் திறந்த வாகனத்தில் சென்றும், நடந்து சென்றும் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தாா்.

மயிலாடுதுறை எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன், மாவட்ட ஜெ. பேரவை செயலாளா் வி.ஜி.கே.செந்தில்நாதன், மயிலாடுதுறை ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் மகேஸ்வரி முருகவேல், பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட நிா்வாகிகள் உடன் சென்றனா். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் அதிமுக, பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டா்களும் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com