வேதாரண்யம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.கே.வேதரத்தினம் தலைஞாயிறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
தலைஞாயிறு கிறிஸ்தவ சபைக்கு சென்ற அவா், அங்குள்ளவா்களிடம் ஆதரவு கோரினாா். மேலும், குரவப்புலம், கரியாப்பட்டினம், செட்டிப்புலம், நெய்விளக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் சென்று வாக்குச் சேகரித்தாா்.
இதில், திமுக ஒன்றியச் செயலாளா் என். சதாசிவம், முன்னாள் செயலாளா் மா.சிங்காரவேல், பொதுக்குழு உறுப்பினா் ஜோதிலெட்சுமி, சரவணமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.