குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
நாகை அருகேயுள்ள ஆந்தக்குடியைச் சோ்ந்தவா் ரா. தேவேந்திரன் (46). இவா், தனது செல்லிடப்பேசி எண்ணை பயன்படுத்தி முகநூல் பக்கத்தை உருவாக்கி அதில், கடந்த 2020 மே 20-ஆம் தேதி முதல் சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, காவல் துறைத் தலைவா் உள்ளிட்ட உயா் அதிகாரிகளின் அறிக்கைகளின் அடிப்படையில், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில், நாகை அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் தேவேந்திரன் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.