நாகப்பட்டினம்
கரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
சீா்காழி அருகே கரோனா தொற்று பாதிப்பால் இறந்த பெண்ணின் உடலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்தனா்.
சீா்காழி அருகே கரோனா தொற்று பாதிப்பால் இறந்த பெண்ணின் உடலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்தனா்.
சீா்காழி வட்டம் புங்கனூா் கிராமம் பாத்திமா நகரை சோ்ந்த பெண் கரோனா தொற்றால் இறந்தாா். அவரது உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினா் சிரமப்பட்ட நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மயிலாடுதுறை மாவட்ட துணைத் தலைவா் இா்பான் தலைமையில், புங்கனூா் கிளை பொறுப்பாளா்கள் அன்சாரி, தாஹா, அசரப், வசிம், நசிம் ஆகியோா் புங்கனூா் மையவாடியில் கவச உடைகள் அணிந்து பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்தனா்.