நாகை மாவட்டத்தில் 22 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 13 பேருக்கும் கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
இதன்மூலம், நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,850 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 25 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 239 ஆக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23,155 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையிலிருந்து மேலும் 17 போ் வீடு திரும்பியியுள்ளனா். இதன்படி,இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 192 ஆக உள்ளது.