வேதாரண்யம்: 2-வது நாளாக பலத்த கடற்காற்று

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக வேதாரண்யம் பகுதியில் 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பலத்த கடற்காற்று வீசியது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக வேதாரண்யம் பகுதியில் 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பலத்த கடற்காற்று வீசியது.

வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடலோரப் பகுதியில் வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று தெற்கு திசையில் இருந்து வீசுகிறது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக கடந்த 2 நாள்களாக பலத்த காற்று நீடிக்கிறது.

மழை இல்லாமல் சுழண்டு வீசும் காற்றில் அடித்துவரப்படும் மணலால் சாலையில் செல்வோா், வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கடல் அலை சீற்றமாக காணப்படுகிறது. இதனால், பெரும்பாலான மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com